என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஏற்காடு மலையில் விபத்து - வாலிபர் பலி
ஏற்காடு:
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது20). புகைப்பட கலைஞர். அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யநாராயணன் (22), தனியார் கம்பெனி ஊழியர். கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (20). சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஊழியர். இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்தனர்.
ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு சேலம் திரும்பினர். பைக்கை விஜய் ஓட்டியுள்ளார். மலைப் பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரில் வந்த தனியார் பஸ்சின் பின் டயர் பகுதியில் பைக் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த அருண் குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியானது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அருண்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து ஏற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்