search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏற்காடு மலையில் விபத்து - வாலிபர் பலி
    X

    ஏற்காடு மலையில் விபத்து - வாலிபர் பலி

    ஏற்காடு மலையில் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது20). புகைப்பட கலைஞர். அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யநாராயணன் (22), தனியார் கம்பெனி ஊழியர். கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (20). சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஊழியர். இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்தனர்.

    ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு சேலம் திரும்பினர். பைக்கை விஜய் ஓட்டியுள்ளார். மலைப் பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரில் வந்த தனியார் பஸ்சின் பின் டயர் பகுதியில் பைக் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த அருண் குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியானது.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அருண்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து ஏற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×