search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே விவசாயி தற்கொலை
    X

    கரூர் அருகே விவசாயி தற்கொலை

    கரூர் அருகே வாழ்க்கையில் மனமுடைந்த விவசாயி விஷமாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலாயுதம் பாளையம்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மாணிக்கநகரை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 69) விவசாயி.

    இவர் கடந்த 6 மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் மஞ்சள் காமாலை நோய் குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த அவர், நேற்றுமுன் தினம் வி‌ஷமாத்திரையை சாப்பிட்டு விட்டார்.

    உயிருக்கு போராடிய அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×