search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ.23,800-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    அட்சய திருதியை வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) வருகிறது.

    அதனால் பல கடைகளில் தங்க நகை வாங்க பலர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை அதிகரித்து வந்தது.

    சென்னையில், நேற்று முன்தினம் காலை ஒரு பவுன்தங்கம் ரூ.23 ஆயிரத்து 760 ஆக இருந்தது. ஆனால் அன்றைய தினம் மாலையில் தங்கம் விலை உயர்ந்தது. பவுனுக்கு அதிரடியாக ரூ.176 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 936-க்கு விற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதே விலை இருந்தது.

    அட்சய திருதியை நெருங்குவதால் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக இன்று பவுனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 800 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,975-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.10-க்கு விற்கிறது.
    Next Story
    ×