என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமக்கோட்டை அருகே திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுகன்யா (வயது 26) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 10 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமான முதல் மாதத்திலேயே முருகையன் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். இதனால் சுகன்யா தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று மாலை சுகன்யா தனது மாமனார் வீட்டுக்கு வந்தார். பிறகு இரவில் திடீரென அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறிய சத்தத்தை கேட்டு வீட்டில் உள்ளவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுகன்யா பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி திருமக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் சுகன்யாவுக்கு திருமணமாகி 10 மாதமே ஆவதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ. செல்வசுரபி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்