என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோத்தகிரியில் 6 மணி நேரம் நீடித்த ஆலங்கட்டி மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
Byமாலை மலர்12 April 2018 9:54 AM GMT (Updated: 12 April 2018 9:54 AM GMT)
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் கோத்தகிரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் கோத்தகிரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
கோத்தகிரி, அளக்கரை, அரவேனு, கட்டப்பட்டு உள்ளிட்ட இடங்களில் இந்த மழை நீடித்தது. இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த மழை அதிகாலை 4 மணி வரை பெய்தது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரணமாக கோத்தகிரியில் குளிர் நிலவியது. இந்த மழை தேயிலை, மலை காய்கறி பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
கோவையிலும் நேற்று இரவு மழை பெய்தது. கோவை புறநகர் பகுதியான வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. கோவை மாநகர் பகுதியில் லேசான தூறல் அடித்தது.
மழை காரணமாக லங்கா கார்னர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் ரோடுகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X