search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகை அவுரித்திடலில் இந்து ஆதியன் பழங்குடியின மக்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மாயாண்டி தலைமை தாங்கினார். செயலாளர் சக்திவேல், பொருளாளர் சாமிநாதன், துணை தலைவர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி கலந்துகொண்டு பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் செல்லூர், நீலப்பாடி, பொறக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இந்து ஆதியன் பழங்குடி இன மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட முன்னாள் தலைவர் பிச்சை நன்றி கூறினார்.
    Next Story
    ×