என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரியலூர் அருகே இளம்பெண் அடித்துக்கொலை- கணவன் வெறிச்செயல்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள துளார் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 35). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த சிவகுருநாதன் மகள் முத்துமாரி (30) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. நதியா, நதி, நதிஷ் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன், முத்துமாரியை உருட்டுகட்டையால் சரமாரி தாக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பி னும் சிகிச்சை பலனின்றி இன்று காலை முத்துமாரி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கூவாகம் போலீசார் கடந்த 3-ந்தேதி நடராஜன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது முத்துமாரி இறந்து விட்டதால், நடராஜன் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் இறந்து, தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது குழந்தைகள் 3 பேரும் நிர்கதியாய் தவித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்