என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே பிளஸ்-1 மாணவி கற்பழிப்பு: 2 மாணவர்கள் கைது
Byமாலை மலர்6 April 2018 11:22 AM GMT (Updated: 6 April 2018 11:22 AM GMT)
திருவண்ணாமலை அருகே பிளஸ்-1 மாணவியை கற்பழித்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே உள்ள பீமானந்தல் கிராமத்தை சேர்ந்த 16 வயது உடைய 2 மாணவர்கள், கன்னகுருக்கையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்களில் ஒருவனின் உறவினர் மகளும், அதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு மாணவியின் தந்தை இறந்துவிட்டார்.
இதையடுத்து, திருவண்ணாமலை அருகே தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி மாணவி பள்ளிக்கு சென்று வந்தார். மாணவியை பார்க்க அடிக்கடி 2 மாணவர்களும் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது, பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஆதரவின்றி தவிக்கும் தனக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் கூறினால் அவமானம் என்று நினைத்த அந்த மாணவி, வெளியில் சொல்லாமல் மறைத்தார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட 2 மாணவர்களும், மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இதையடுத்து, பொருத்தது போதும் என்று கொதித்தெழுந்த மாணவி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 மாணவர்களையும் கைது செய்தனர். #Tamilnews
திருவண்ணாமலை அருகே உள்ள பீமானந்தல் கிராமத்தை சேர்ந்த 16 வயது உடைய 2 மாணவர்கள், கன்னகுருக்கையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்களில் ஒருவனின் உறவினர் மகளும், அதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு மாணவியின் தந்தை இறந்துவிட்டார்.
இதையடுத்து, திருவண்ணாமலை அருகே தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி மாணவி பள்ளிக்கு சென்று வந்தார். மாணவியை பார்க்க அடிக்கடி 2 மாணவர்களும் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது, பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஆதரவின்றி தவிக்கும் தனக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் கூறினால் அவமானம் என்று நினைத்த அந்த மாணவி, வெளியில் சொல்லாமல் மறைத்தார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட 2 மாணவர்களும், மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இதையடுத்து, பொருத்தது போதும் என்று கொதித்தெழுந்த மாணவி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 மாணவர்களையும் கைது செய்தனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X