என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்3 April 2018 4:17 PM GMT (Updated: 3 April 2018 4:17 PM GMT)
ராயக்கோட்டை அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை ஊராட்சி சூளகுண்டா அருகே உள்ள தேன்கல்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 32). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. 10 ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது.
கடந்த 25-ந் தேதி பெரியசாமி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், மனைவி லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பெரியசாமியின் மனைவி லட்சுமி கோபித்து கொண்டு தனது தாய் வீடான கீழ்நுக்கி கிராமத்திற்கு சென்று விட்டார். இந்த நிலையில் பெரியசாமி தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பெரியசாமி விஷத்தை குடித்து விட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு மனைவியிடம் நான் விஷம் குடித்து விட்டேன் என்று கூறினார். பின்னர் சிறிதுநேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பெரியசாமி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை ஊராட்சி சூளகுண்டா அருகே உள்ள தேன்கல்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 32). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. 10 ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது.
கடந்த 25-ந் தேதி பெரியசாமி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், மனைவி லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பெரியசாமியின் மனைவி லட்சுமி கோபித்து கொண்டு தனது தாய் வீடான கீழ்நுக்கி கிராமத்திற்கு சென்று விட்டார். இந்த நிலையில் பெரியசாமி தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பெரியசாமி விஷத்தை குடித்து விட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு மனைவியிடம் நான் விஷம் குடித்து விட்டேன் என்று கூறினார். பின்னர் சிறிதுநேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பெரியசாமி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X