என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குமாராட்சி அருகே மணல் லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு - 4 பேர் கைது
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் குமாராட்சி அருகே சி.அரசூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசுமணல் குவாரிசெயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான லாரிகளில் மணல் ஏற்றி செல்லப்படுகிறது.
சேலம்மாவட்டம் உக்காரபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் லோகநாதன் (வயது52) என்பவர் மணல் அள்ள லாரியை கொள்ளிடம் ஆற்றுக்கு கொண்டு வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (33), கருணாகரன் (27), பாபு (40), காமராஜ் (35) ஆகியோர் லாரி டிரைவர் லோகநாதனிடம் இங்கு மணல் அள்ள வேண்டும் என்றால் எங்களுக்கு மாமூல்பணம் தரவேண்டும் என கேட்டனர்.
லோகநாதன் பணம்கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் லோகநாதனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அவர் சட்டைபையில் வைத்திருந்த ரூ.500 பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.
தாக்குதலில் காயம் அடைந்த லோகநாதன் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து லோகநாதன்குமாராட்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷியாம்சுந்தர் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த கண்ணன், கருணாகரன், பாபு, காமராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்