என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
Byமாலை மலர்30 March 2018 1:58 AM GMT (Updated: 30 March 2018 1:58 AM GMT)
கூட்டுறவு சங்க தேர்தலுக் கான வேட்பு மனு தாக்கலின் போது ஆளும்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதால் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் 15 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு கூட்டுறவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 26-ந்தேதி தொடங்கியது.
பல இடங்களில் ஆளும்கட்சியினரிடம் இருந்து மட்டுமே வேட்பு மனுக்கள் பெறப்படுவதாகவும், எதிர்கட்சியினரின் வேட்பு மனுக்களை அதிகாரிகள் பெற மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில் வேலூர் மாவட்டம், தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி வேலூரைச் சேர்ந்த அசோக்குமார் உள்பட 4 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மாசிலாமணி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் போது ஆளும்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டனர். ஆளும்கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய அதிகாரிகள் துணையாக இருந்தனர். எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏதாவது ஒரு காரணத்தை கூறி அதிகாரிகள் பெற மறுத்தனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது. எனவே, கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். அனைவரது வேட்பு மனுக்களையும் பெற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் ஏப்ரல் 2-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. #Tamilnews
தமிழகம் முழுவதும் 15 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு கூட்டுறவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 26-ந்தேதி தொடங்கியது.
பல இடங்களில் ஆளும்கட்சியினரிடம் இருந்து மட்டுமே வேட்பு மனுக்கள் பெறப்படுவதாகவும், எதிர்கட்சியினரின் வேட்பு மனுக்களை அதிகாரிகள் பெற மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில் வேலூர் மாவட்டம், தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி வேலூரைச் சேர்ந்த அசோக்குமார் உள்பட 4 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மாசிலாமணி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் போது ஆளும்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டனர். ஆளும்கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய அதிகாரிகள் துணையாக இருந்தனர். எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏதாவது ஒரு காரணத்தை கூறி அதிகாரிகள் பெற மறுத்தனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது. எனவே, கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். அனைவரது வேட்பு மனுக்களையும் பெற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் ஏப்ரல் 2-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X