என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூரில் பா.ஜ.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டம்- தா.பாண்டியன் பங்கேற்பு
வில்லியனூர்:
வில்லியனூரில் சில தினங்களுக்கு முன்பு தி.க. மகளிர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை நடத்த விடாமல் பா.ஜ.கவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதை கண்டித்தும் ,காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகாத வார்த்தைகளால் திட்டியதை கண்டித்தும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் விசுவநாதன், திராவிடர் கழக சிவ.வீரமணி, விடு தலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், தி.மு.க. பிரமுகர் யூனுஸ், இந்திய கம்யூனிஸ்டு தொழிற்சங்க தலைவர் அபிஷேகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு லெனினிஸ்டு பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டு பா.ஜனதாவையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்