search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் மக்களை திசை திரும்புகிறார் - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
    X

    மு.க.ஸ்டாலின் மக்களை திசை திரும்புகிறார் - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

    தமிழகம் அமைதி பூங்கா மாநிலமாக திகழ்கிறது. மு.க.ஸ்டாலின் மக்களை திசை திருப்புகிறார் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டி விடுவதை அனுமதிக்க முடியாது. இந்த அரசு அனுமதிக்காது. எதிர்க்கட்சி தலைவர் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ அல்லது புரிந்தும் புரியாமல் இவ்வாறு பேசுகிறாரா என்று தெரியவில்லை.

    தமிழகம் அமைதி பூங்கா மாநிலமாக திகழ்கிறது. இதை பொறுக்க முடியாமல் மு.க.ஸ்டாலின் மக்களை திசை திருப்பி தீய சக்திகளுடன் கலந்து பேசி இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு துணை போகிறாரோ? என்று எண்ண வேண்டியுள்ளது.

    ரத ஊர்வலம் 5 மாநிலங்கள் வழியாக வந்தது. இதில் என்றும் பிரச்சினை இல்லை. இதற்கு காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

    கம்யூனிஸ்டு ஆளும் மாநிலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நுழையும்போது மட்டுமே இங்கு அரசியல் ஆக்கப்படுகிறது. காங்கிர சாரும் சேர்ந்து கோ‌ஷம் போடுகிறார்கள்.

    இதை பயன்படுத்தி மத கலவரங்களை தூண்ட நினைத்தால் தமிழக அரசு கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தும்.

    மு.க.ஸ்டாலின் இங்கு பேசும்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் அவரது பேச்சை முழுமையாக அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். இது தொடர்ந்து சபாநாயகர், மு.க.ஸ்டாலின் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.

    அதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர். ராமசாமி பேச்சும் நீக்கப்பட்டது. #tamilnews
    Next Story
    ×