என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மு.க.ஸ்டாலின் மக்களை திசை திரும்புகிறார் - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
Byமாலை மலர்20 March 2018 9:13 AM GMT (Updated: 20 March 2018 9:13 AM GMT)
தமிழகம் அமைதி பூங்கா மாநிலமாக திகழ்கிறது. மு.க.ஸ்டாலின் மக்களை திசை திருப்புகிறார் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:
சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டி விடுவதை அனுமதிக்க முடியாது. இந்த அரசு அனுமதிக்காது. எதிர்க்கட்சி தலைவர் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ அல்லது புரிந்தும் புரியாமல் இவ்வாறு பேசுகிறாரா என்று தெரியவில்லை.
தமிழகம் அமைதி பூங்கா மாநிலமாக திகழ்கிறது. இதை பொறுக்க முடியாமல் மு.க.ஸ்டாலின் மக்களை திசை திருப்பி தீய சக்திகளுடன் கலந்து பேசி இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு துணை போகிறாரோ? என்று எண்ண வேண்டியுள்ளது.
ரத ஊர்வலம் 5 மாநிலங்கள் வழியாக வந்தது. இதில் என்றும் பிரச்சினை இல்லை. இதற்கு காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்டு ஆளும் மாநிலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நுழையும்போது மட்டுமே இங்கு அரசியல் ஆக்கப்படுகிறது. காங்கிர சாரும் சேர்ந்து கோஷம் போடுகிறார்கள்.
இதை பயன்படுத்தி மத கலவரங்களை தூண்ட நினைத்தால் தமிழக அரசு கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தும்.
மு.க.ஸ்டாலின் இங்கு பேசும்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் அவரது பேச்சை முழுமையாக அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். இது தொடர்ந்து சபாநாயகர், மு.க.ஸ்டாலின் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.
அதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர். ராமசாமி பேச்சும் நீக்கப்பட்டது. #tamilnews
சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டி விடுவதை அனுமதிக்க முடியாது. இந்த அரசு அனுமதிக்காது. எதிர்க்கட்சி தலைவர் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ அல்லது புரிந்தும் புரியாமல் இவ்வாறு பேசுகிறாரா என்று தெரியவில்லை.
தமிழகம் அமைதி பூங்கா மாநிலமாக திகழ்கிறது. இதை பொறுக்க முடியாமல் மு.க.ஸ்டாலின் மக்களை திசை திருப்பி தீய சக்திகளுடன் கலந்து பேசி இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு துணை போகிறாரோ? என்று எண்ண வேண்டியுள்ளது.
ரத ஊர்வலம் 5 மாநிலங்கள் வழியாக வந்தது. இதில் என்றும் பிரச்சினை இல்லை. இதற்கு காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்டு ஆளும் மாநிலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நுழையும்போது மட்டுமே இங்கு அரசியல் ஆக்கப்படுகிறது. காங்கிர சாரும் சேர்ந்து கோஷம் போடுகிறார்கள்.
இதை பயன்படுத்தி மத கலவரங்களை தூண்ட நினைத்தால் தமிழக அரசு கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தும்.
மு.க.ஸ்டாலின் இங்கு பேசும்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் அவரது பேச்சை முழுமையாக அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். இது தொடர்ந்து சபாநாயகர், மு.க.ஸ்டாலின் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.
அதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர். ராமசாமி பேச்சும் நீக்கப்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X