என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
70 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தினகரனுடன் தொடர்பில் உள்ளனர்- புகழேந்தி தகவல்
Byமாலை மலர்6 March 2018 10:00 AM GMT (Updated: 6 March 2018 10:00 AM GMT)
தமிழக எம்.எல்.ஏ.க்களில் 60 முதல் 70 பேர் இப்போதும் எங்களிடம் தொடர்பில் தான் உள்ளனர் என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார். #Pugazhendhi #ADMK
புதுச்சேரி:
தினகரன் ஆதரவாளர் கர்நாடகாவை சேர்ந்த புகழேந்தி புதுவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழகத்தில் ஆட்சி விரைவில் முடியப்போகிறது. இதனால் எந்தவிதமான ஒப்பந்த பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் அமைச்சர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம். நம்பி ஏமாறவும் வேண்டாம்.
பிரதமர் மோடியை குஷிப்படுத்த தமிழக அமைச்சர்கள் இந்தி கற்று வருகின்றனர். அ.தி. மு.க.வை அழிக்க நினைக்கும் மோடியை நம்பி தமிழக அமைச்சர்கள் ஏமாறுகின்றனர். நடிகர்கள் ரஜினியும், கமலும் கட்சி ஆரம்பித்ததில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்குள் தான் போட்டி. அவர்களை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவும் இல்லை. அவர்களுடைய செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நன்மை கிடைக்க போராடும் சக்தியாக இருந்த அம்மாவை நாம் இழந்துவிட்டோம். அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றால் போதுமா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழகத்திற்கு சாதகமான முடிவை பிரதமர் மோடி ஒருபோதும் எடுக்கமாட்டார். அவர் தமிழகத்திற்கு உதவவும் மாட்டார். யாரையும் சந்திக்கவும் மாட்டார்.
எங்கள் கைக்கு விரைவில் கட்சியும், ஆட்சியும் திரும்பவும் கிடைக்கும். கட்சி, இரட்டை இலை சின்னம், ஆட்சி எல்லாம் எங்களிடம் திரும்ப வரும். தமிழக எம்.எல்.ஏ.க்களில் 60 முதல் 70 பேர் இப்போதும் எங்களிடம் தொடர்பில் தான் உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பில் தீர்ப்பு வந்த பிறகு முழு கட்சியும் எங்களிடம் வந்துவிடும். இதனால் புதிய கட்சி தொடங்குவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
புதுவை எம்.எல்.ஏ. வையாபுரிமணிகண்டன் கூறியது போல காவிரிக்காக காவிரி படுகையில் உள்ள தமிழக எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் நல்ல தலைவருக்கு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறியுள்ளார். முதலில் அவர் ராகவேந்திரா திருமண மண்டபத்தை விட்டு வெளியே வர வேண்டும். தமிழகத்தில் நல்ல தலைவர் தினகரன் தான். ரஜினி ஆங்கிலம் கற்றுக்கொள்ள சொல்கிறார். இதை அவரால் கர்நாடகாவில் வந்து சொல்ல முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது புதுவை வக்கீல் வேல்முருகன், பாண்டு, மூர்த்தி, உமா கணேசன், தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். #Tamilnews
தினகரன் ஆதரவாளர் கர்நாடகாவை சேர்ந்த புகழேந்தி புதுவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழகத்தில் ஆட்சி விரைவில் முடியப்போகிறது. இதனால் எந்தவிதமான ஒப்பந்த பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் அமைச்சர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம். நம்பி ஏமாறவும் வேண்டாம்.
பிரதமர் மோடியை குஷிப்படுத்த தமிழக அமைச்சர்கள் இந்தி கற்று வருகின்றனர். அ.தி. மு.க.வை அழிக்க நினைக்கும் மோடியை நம்பி தமிழக அமைச்சர்கள் ஏமாறுகின்றனர். நடிகர்கள் ரஜினியும், கமலும் கட்சி ஆரம்பித்ததில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்குள் தான் போட்டி. அவர்களை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவும் இல்லை. அவர்களுடைய செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நன்மை கிடைக்க போராடும் சக்தியாக இருந்த அம்மாவை நாம் இழந்துவிட்டோம். அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றால் போதுமா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழகத்திற்கு சாதகமான முடிவை பிரதமர் மோடி ஒருபோதும் எடுக்கமாட்டார். அவர் தமிழகத்திற்கு உதவவும் மாட்டார். யாரையும் சந்திக்கவும் மாட்டார்.
எங்கள் கைக்கு விரைவில் கட்சியும், ஆட்சியும் திரும்பவும் கிடைக்கும். கட்சி, இரட்டை இலை சின்னம், ஆட்சி எல்லாம் எங்களிடம் திரும்ப வரும். தமிழக எம்.எல்.ஏ.க்களில் 60 முதல் 70 பேர் இப்போதும் எங்களிடம் தொடர்பில் தான் உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பில் தீர்ப்பு வந்த பிறகு முழு கட்சியும் எங்களிடம் வந்துவிடும். இதனால் புதிய கட்சி தொடங்குவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
புதுவை எம்.எல்.ஏ. வையாபுரிமணிகண்டன் கூறியது போல காவிரிக்காக காவிரி படுகையில் உள்ள தமிழக எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் நல்ல தலைவருக்கு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறியுள்ளார். முதலில் அவர் ராகவேந்திரா திருமண மண்டபத்தை விட்டு வெளியே வர வேண்டும். தமிழகத்தில் நல்ல தலைவர் தினகரன் தான். ரஜினி ஆங்கிலம் கற்றுக்கொள்ள சொல்கிறார். இதை அவரால் கர்நாடகாவில் வந்து சொல்ல முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது புதுவை வக்கீல் வேல்முருகன், பாண்டு, மூர்த்தி, உமா கணேசன், தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X