search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவைக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் காவிரி நீர் தீர்ப்புக்கு நாராயணசாமி வரவேற்பு
    X

    புதுவைக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் காவிரி நீர் தீர்ப்புக்கு நாராயணசாமி வரவேற்பு

    காவிரி நதிநீர் குறித்த உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை புதுவை அரசு வரவேற்கிறது என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் குறித்த உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை புதுவை அரசு வரவேற்கிறது. தீர்ப்பில் காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இது, காரைக்கால் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். மேலும் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சி தரும் செய்தி ஆகும்.

    இதன்படி காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்து மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×