என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாடிப்பட்டி அருகே பாதயாத்திரை பக்தரிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது
வாடிப்பட்டி:
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த மதியழகன் மகன் ஜெய வீரபாண்டியன் (வயது 35). இவர் தனியார் தொலைபேசி நிறுவனத்தில் கேபிள் பதிக்கும் தொழிலாளியாக பணிசெய்து வருகிறார்.
கடந்த மாதம் இவர் மதுரையிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்றார். வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவு பகுதியில் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் நடந்து வந்த போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 4பேர் ஜெயவீரபாண்டியனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 2 செல்போன்கள், ரூ. 400 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வாடிப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த பொதும்பு சூரியா (19), சொக்கநாதபுரம் கார்த்திக் (22 ), கொடிக்குளம் ராம்குமார் என்ற கொடி (23), விளாங்குடி நீதிராஜன் என்ற காசிமாயன் (17)ஆகியோரிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குபின் பதில் கூறினர்.
பின்னர் பழனி பாதயாத்திரை பக்தரிடம் செல்போன் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்ட னர். அதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்