என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேவகோட்டை அருகே அய்யனார் கோவிலில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள முப்பையூர் கிராமத்தில் முப்பால் அய்யனார் கோவில் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விசேஷ நாட்களில் கூட்டம் அலைமோதும்.
நேற்று பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்றுவிட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் கோவிலின் சுவரில் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலில் இருந்த சுவாமி சிலையை பெயர்த்து எடுக்க முயன்றனர். பல மணி நேரமாகியும் சிலையை எடுக்க முடியவில்லை.
இதையடுத்து அந்த கும்பல் கோவில் உண்டியலை உடைக்க முயன்றது. இதிலும் தோல்வி ஏற்பட்டது. விரக்தி அடைந்த கும்பல் கோவில் வெளியே இருந்த சிறிய அளவிலான அம்மன் சிலையை திருடி சென்றது.
இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிகிடந்தன. சுவாமி சிலை பீடம் உண்டியல்கள் சேதமாகியிருந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருட முயன்ற நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்