என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்புவனம் அருகே கந்து வட்டி கொடுமை: வாலிபர் மீது வழக்கு
Byமாலை மலர்12 Dec 2017 5:07 PM GMT (Updated: 12 Dec 2017 5:08 PM GMT)
திருப்புவனம் அருகே கந்து வட்டி கொடுமை காரணமாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் திருப்புவனம் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2012-ம் ஆண்டு அல்லி நகரத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவரிடம் வீட்டு பத்திரங்களை அடமானமாக வைத்து ரூ. 1 லட்சம் கடன் பெற்றேன்.
அதற்கு வட்டியும் சேர்த்து ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துவிட்டேன். ஆனால் அவர் வீட்டு பத்திரத்தை கொடுக்க மறுக்கிறார்.
இது பற்றி கேட்டபோது கூடுதலாக ரூ. 3 லட்சம் கேட்கிறார். மேலும் வீட்டை தனது பெயருக்கு மாற்றித்தருமாறும் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டு பத்திரத்தை மீட்டுத்தர வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி விசாரணை நடத்தி சபரிநாதன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் திருப்புவனம் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2012-ம் ஆண்டு அல்லி நகரத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவரிடம் வீட்டு பத்திரங்களை அடமானமாக வைத்து ரூ. 1 லட்சம் கடன் பெற்றேன்.
அதற்கு வட்டியும் சேர்த்து ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துவிட்டேன். ஆனால் அவர் வீட்டு பத்திரத்தை கொடுக்க மறுக்கிறார்.
இது பற்றி கேட்டபோது கூடுதலாக ரூ. 3 லட்சம் கேட்கிறார். மேலும் வீட்டை தனது பெயருக்கு மாற்றித்தருமாறும் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டு பத்திரத்தை மீட்டுத்தர வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி விசாரணை நடத்தி சபரிநாதன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X