என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெமிலிச்சேரியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மாற்றமுயற்சி வாலிபர் கைது
திருநின்றவூர்:
பட்டாமிராமை அடுத்த நெமிலிச்சேரியில் உள்ள தனியார் சூப்பர் மார்க் கெட்டில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் பொருட்களை வாங்கிவிட்டு நான்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
அதை வாங்கி பார்த்த ஊழியர், ரூபாய் நோட்டுகள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார். 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அவர் ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முயற்சி செய்தது தெரிந்தது.
உடனே அந்த வாலிபரை கடை ஊழியர்கள் மடக்கி பிடித்து திருநின்றவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து வாலிபரை கைது செய்து அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர் பட்டாபிராம் ஜெயராம் நகரை சேர்ந்த பாபு உசேன் என்பது தெரிய வந்தது. போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தனக்கு காஞ்சீபுரத்தில் உள்ள உறவினர் அலிம் கொடுத்தார் என்று பாபு உசேன் கூறினார்.
இதையடுத்து போலீசார் காஞ்சீபுரத்துக்கு சென்று அலிமை தேடினர். அப்போது அவர் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. பிடிபட்ட பாபு உசேனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்