என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடும் பனிப்பொழிவு: சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு
Byமாலை மலர்12 Dec 2017 3:46 AM GMT (Updated: 12 Dec 2017 3:47 AM GMT)
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்ததால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்புள்ளாகியுள்ளது.
சென்னை:
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இரவில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் அதிகாலையில் வாகனம் ஓட்டுவதற்கு கடும் சிரமமாக உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் புகை மண்டலாக காட்சியளித்தது.
இந்நிலையில் இன்று காலை மொரிஷியஸ் மற்றும் ரியாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு விமானங்கள் கடும் பனிப்பொழிவால் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்க முடியாமல் திணறியது. இதனால் அந்த விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன.
உள்நாட்டு விமானங்கள் சுமார் 20 நிமிடங்கள் காலதாமதமாக தரையிறங்கின. விமான சேவை பாதிப்பால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X