என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன புதுவை அரசு ஊழியர் மத்தியபிரதேசத்தில் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்9 Dec 2017 4:49 AM GMT (Updated: 9 Dec 2017 4:49 AM GMT)
மனநிலை பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன புதுவை அரசு ஊழியர் மத்திய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 50). அரசு ஊழியராக இருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 2007-ம் ஆண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வைத்தியநாதனை தேடி வந்தனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை.
கணவர் காணாமல் போன சோகத்தில் இருந்த ஜெயலட்சுமி, அனிதா நகரில் இருந்த வீட்டை விற்று விட்டு முருங்கப்பாக்கத்தில் குடியேறினார்.
இந்த நிலையில் மத்தியபிரதேச அரசின் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து வடக்கு போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில், புதுவையை சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் மத்தியபிர தேசத்தில் உள்ள உத்தான் மாவட்ட ஆசிரமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் வைத்தியநாதன் கையால் எழுதப்பட்ட முகவரி மற்றும் அவரது பழைய, புதிய புகைப்படம் ஆகியவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். மத்திய பிரதேசத்தில் இருந்து அனுப்பப்பட்ட முகவரி தவறாக இருந்ததால் உறவினரை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும் பின்கோடு நம்பரை வைத்து தேடி பார்த்ததில் அவர் முதலியார் பேட்டை அனிதா நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வைத்தியநாதன் என்பது தெரிய வந்தது. பின்னர் முருங்கப்பாக்கத்தில் வசித்து வரும் ஜெயலட்சுமியிடம் வடக்கு போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் நேரடியாக வந்து இந்த தகவலை தெரிவித்தார்.
கணவர் உயிரோடு இருக்கும் தகவல் அறிந்து ஜெயலட்சுமி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக கணவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என தவியாய் தவித்து வாழ்ந்து வந்தேன். தற்போது இந்த தகவல் எனக்கு மற்றொரு ஜென்மம் எடுத்தது போல் இருக்கிறது என்றார்.
வடக்கு போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் உத்தரவின் பேரில் முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான தனிப்படை போலீசார் வைத்தியநாதனை அழைத்து வர ஜெயலட்சுமியுடன் மத்தியபிரதேசம் சென்று உள்ளனர்.
முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 50). அரசு ஊழியராக இருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 2007-ம் ஆண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வைத்தியநாதனை தேடி வந்தனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை.
கணவர் காணாமல் போன சோகத்தில் இருந்த ஜெயலட்சுமி, அனிதா நகரில் இருந்த வீட்டை விற்று விட்டு முருங்கப்பாக்கத்தில் குடியேறினார்.
இந்த நிலையில் மத்தியபிரதேச அரசின் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து வடக்கு போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில், புதுவையை சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் மத்தியபிர தேசத்தில் உள்ள உத்தான் மாவட்ட ஆசிரமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் வைத்தியநாதன் கையால் எழுதப்பட்ட முகவரி மற்றும் அவரது பழைய, புதிய புகைப்படம் ஆகியவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். மத்திய பிரதேசத்தில் இருந்து அனுப்பப்பட்ட முகவரி தவறாக இருந்ததால் உறவினரை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும் பின்கோடு நம்பரை வைத்து தேடி பார்த்ததில் அவர் முதலியார் பேட்டை அனிதா நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வைத்தியநாதன் என்பது தெரிய வந்தது. பின்னர் முருங்கப்பாக்கத்தில் வசித்து வரும் ஜெயலட்சுமியிடம் வடக்கு போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் நேரடியாக வந்து இந்த தகவலை தெரிவித்தார்.
கணவர் உயிரோடு இருக்கும் தகவல் அறிந்து ஜெயலட்சுமி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக கணவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என தவியாய் தவித்து வாழ்ந்து வந்தேன். தற்போது இந்த தகவல் எனக்கு மற்றொரு ஜென்மம் எடுத்தது போல் இருக்கிறது என்றார்.
வடக்கு போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் உத்தரவின் பேரில் முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான தனிப்படை போலீசார் வைத்தியநாதனை அழைத்து வர ஜெயலட்சுமியுடன் மத்தியபிரதேசம் சென்று உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X