என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாற்றங்களை கொண்டு வந்ததால் புதுவையில் ஊழல் குறைந்துள்ளது: கவர்னர் கிரண்பேடி
Byமாலை மலர்2 Dec 2017 5:30 AM GMT (Updated: 2 Dec 2017 5:30 AM GMT)
புதுவையில் சிறப்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஊழல் குறைந்துள்ளது என்று கவர்னர் கிரண்பேடி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவைக்கு தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைமை செயலாளர் அஷ்வினி குமார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புதிய தலைமை செயலாளர் விதிமுறைகளை பின்பற்றி வருவதால் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து பணிகளும் சுமுகமாக நடைபெற்று வருகிறது.
முன்னாள் தலைமை செயலாளர் மீது பல்வேறு புகார்கள் இருந்தது தலைமை செயலாளரின் பொறுப்பை உணர்ந்து அவர் செயல்படாததால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது.
புதுவை விமான நிலையம் முறையாக இயக்கப்படவில்லை என்கின்ற முதல்-அமைச்சரின் குற்றசாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் விமான சேவைகள் மேம்படுத்தப்படும்.
புதுவை பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் மாணவர்களின் தரம் மேம்படும்.
மேலும் புதுவையை பொருத்தவரை சிறப்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஊழல் குறைந்துள்ளது.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறினார்.
புதுவை கவர்னர் கிரண்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவைக்கு தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைமை செயலாளர் அஷ்வினி குமார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புதிய தலைமை செயலாளர் விதிமுறைகளை பின்பற்றி வருவதால் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து பணிகளும் சுமுகமாக நடைபெற்று வருகிறது.
முன்னாள் தலைமை செயலாளர் மீது பல்வேறு புகார்கள் இருந்தது தலைமை செயலாளரின் பொறுப்பை உணர்ந்து அவர் செயல்படாததால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது.
புதுவை விமான நிலையம் முறையாக இயக்கப்படவில்லை என்கின்ற முதல்-அமைச்சரின் குற்றசாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் விமான சேவைகள் மேம்படுத்தப்படும்.
புதுவை பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் மாணவர்களின் தரம் மேம்படும்.
மேலும் புதுவையை பொருத்தவரை சிறப்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஊழல் குறைந்துள்ளது.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X