search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை காங்கிரஸ் அலுவலகத்துக்கு ‘பூட்டு’
    X

    மயிலாடுதுறை காங்கிரஸ் அலுவலகத்துக்கு ‘பூட்டு’

    காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்ததால் காங்கிரஸ் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் கூறை நாட்டில் காமராஜ் மாளிகை கட்டிடத்தில் காங்கிரஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    நாகை மாவட்ட காங்கிரஸ் நகர தலைவராக செல்வம் என்பவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த ராமானுஜம் என்பவர் நகர தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

    தற்போது மாவட்ட தலைவராக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் கருத்து வேறுபாடு காரணமாக செல்வத்தை நீக்கிவிட்டு ராமானுஜத்தை நியமனம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அறிந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வத்தின் ஆதரவாளர்கள் புதிய நிர்வாகி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் இன்று காலை மயிலாடுதுறையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு பூட்டு போட்டுவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்ததால் காங்கிரஸ் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    மயிலாடுதுறையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு ‘பூட்டு’ போட்ட நிர்வாகிகளை படத்தில் காணலாம்.

    Next Story
    ×