search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் அலுவலகம்"

    • ஒப்பந்ததாரர் பிரகாசுக்கு, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மீது கோபம் ஏற்பட்டது.
    • கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை:

    கோவை ஒண்டிபு தூரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(வயது61). இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மேலும் இவர் கோவை மாநகராட்சியின் 56-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(39). இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்யும் பணியை ஒப்பந்த அடிப்படையில் எடுத்திருந்தார்.ஆனால் இவர் அந்த பொதுக்கழிப்பிடத்தை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றும், பராமரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்திக்கு புகார் வரவே அவர், ஒப்பந்ததாரர் பிரகாசிடம், சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். ஆனாலும் அவர் அதனை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார்.

    இதையடுத்து கவுன்சிலர், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்ததோடு, மாமன்ற கூட்டத்தில் இதுதொடர்பாக புகார் வைத்தார். இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஒப்பந்ததாரர் பிரகாசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனால் ஒப்பந்ததாரர் பிரகாசுக்கு, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மீது கோபம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் தனது நண்பரான மற்றொரு ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணன் என்பவரை அழைத்து கொண்டு கோவை ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன்பு மனித கழிவை வீசி சென்றார்.

    இதேபோல், சிங்காநல்லூர் மசக்காளிபாளையத்தில் உள்ள அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ள பன்னீர்செல்வம் என்பவரது வீட்டின் முன்பு மனித கழிவை வீசியுள்ளனர்.

    இதுதொடர்பாக கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் அ.தி.மு.க கிளை செயலாளர் வீட்டின் முன்பு மனித கழிவை வீசி சென்ற கழிவறை சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரர்களான பிரகாஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து பிரகாசிடம் மனித கழிவுகளை வீசியது குறித்து விசாரித்தனர். அப்போது, அ.தி.மு.க. கிளை செயலாளரான பன்னீர்செல்வத்திடம் நான் வேலை பார்த்தபோது அவர் தனக்கு முறையாக சம்பளம் தரவில்லை என்றும், காங்கிரஸ் கவுன்சிலர் தன் மீது புகார் தெரிவித்த ஆத்திரத்தில் தனது நண்பருடன் சேர்ந்து இதனை செய்ததாக தெரிவித்தார்.

    • ராகுல்காந்தி வாழ்க... வாழ்க... என கூறியபடி பிரகாஷ் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
    • ராகுல்காந்தி முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற வேண்டுமென இருவருமே விரும்பினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டம் வி.புதூர் கிராமத்தை சேர்ந்த கட்சி பிரமுகர் பிரகாஷ் மற்றும் புதுச்சேரி ஆண்டியார் பாளையத்தை சேர்ந்த அன்பரசி ஆகியோரது திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் நடத்தி வைத்தனர்.

    இதில் ராகுல்காந்தி வாழ்க... வாழ்க... என கூறியபடி பிரகாஷ் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

    அப்போது மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது:-

    ராகுல்காந்தி முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற வேண்டுமென இருவருமே விரும்பினர்.

    ஆனால் அதற்கான சூழல் அமையாத நிலையில் தற்போது கட்சி அலுவலகத்தில் அனைவரது ஆதரவோடு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றார்.

    இப்போது ஆட்சியில் இருக்கிறவர்கள் நாட்டின் சுதந்திரத்தை தாங்கள் தான் கொண்டு வந்த மாதிரி பாவனை காட்டுகிறார்கள். ஆனால் சுதந்திரம் பெற உயிர் தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சி மட்டும்தான் என்று கூறினார். 

    ×