search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress office"

    பீகாரில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு நாங்கள் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம் என காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. #Congress #GrandAlliance
    டெல்லி:

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவரது கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

    இதற்கிடையே, மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவை அகற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் மற்றும் பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 



    இந்நிலையில், பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான மெகா கூட்டணியை காங்கிரஸ் கட்சி டெல்லியில் இன்று அறிவித்தது.

    டெல்லியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ், ஆர்ஜேடி, சரத் யாதவ், உபேந்திர குஷ்வாகா, ஜித்தன்ராம் மஞ்சி  உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் இங்கு வந்து தங்களது கூட்டணியை உறுதி செய்துள்ளனர் என தெரிவித்தார்.

    ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாகா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது. #Congress #GrandAlliance
    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொருட்களை அடித்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. #ChhattisgarhElection #ChhattisgarhCongress
    ராய்ப்பூர்:

    சத்திஸ்கர் மாநிலத்தில் வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 19 வேட்பாளர்கள் இடம்பெற்றனர். இதில் சில வேட்பாளர் தேர்வில் கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது. ராய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராய்ப்பூர் தெற்கு தொகுதி தொடர்பாக நடந்த இந்த மோதலில், அலுவலகத்தில் உள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை தேர்தல் பொறுப்பாளர் புனியா சமாதானப்படுத்தினார்.



    இதேபோல் பிலாஸ்பூரிலும் சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். ஆனாலும் கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை என கட்சி நிர்வாகி நரந்திர போலார் கூறியுள்ளார்.

    ‘கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றிய தங்களுக்கு சீட் வழங்கப்பட வேண்டும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள். அதில் தவறு இல்லை. அதேசமயம், இங்கு யாரும் அதிருப்தியாளர்கள் இல்லை. நாங்கள் ஒரே குடும்பம். பாஜகவுக்கு எதிராக ஒற்றுமையாக இருக்கிறோம்’ என்றார் நரேந்திர போலார். #ChhattisgarhElection #ChhattisgarhCongress
    அலகாபாத்தில் இயங்கி வரும் காங்கிரஸ் அலுவலகம் மாதம் ரூ.35 வாடகையை கூட கட்டாததால் அதன் உரிமையாளர் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #Congress
    அலகாபாத்:

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள சவுக் லொக்காலிட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் அலுவலகம் உள்ளது.

    இது, கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் அலுவலகமாக செயல்படுகிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே காங்கிரஸ் அலுவலகமாக மாறி இருந்தது. இது, 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது.

    காங்கிரஸ் முதுபெரும் தலைவர் தாண்டன், நேரு மனைவி கமலா, இந்திரா காந்தி ஆகியோர் இந்த அலுவலகத்துக்கு பலமுறை வந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த அலுவலகம் தனியாருக்கு சொந்தமானதாகும். அதை காங்கிரஸ் அலுவலகமாக வாடகைக்கு அமர்த்தி இருந்தனர்.

    தற்போது இந்த இடம் ராஜ்குமார் சரஸ்வத் என்பவருக்கு சொந்தமாக உள்ளது. அவர், கட்டிடத்துக்கு 35 ரூபாய் மாத வாடகையாக நிர்ணயித்து இருந்தார். அந்த வாடகையை கூட காங்கிரஸ் கட்சி முறையாக செலுத்தவில்லை.

    10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பைசா கூட வாடகை கொடுத்தது இல்லை. இவ்வாறு ரூ. 50 ஆயிரம் வரை வாடகை பாக்கி உள்ளது.

    கட்டிட உரிமையாளர் பல முறை கேட்டு பார்த்தும் யாரும் அந்த பணத்தை கொடுப்பதாக இல்லை. இதனால் அவர் வாடகையை கொடுங்கள் அல்லது இடத்தை காலி செய்யுங்கள் என்று கூறி காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார்.

    இந்த விவரங்களை காங்கிரஸ் கட்சியினர் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். கட்சி அலுவலகம் இருக்கும் இடம் அலகாபாத்தின் மிக நெருக்கடியான பகுதி ஆகும்.

    அந்த சொத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும். ஆனால் 35 ரூபாய் வாடகையை கூட காங்கிரஸ் கட்சி கொடுக்க முடியாமல் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. #Congress
    ×