search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chhattisgarh Election"

    • காங்கிரஸை எதிர்த்து பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கி உள்ளது
    • 5 வருடங்களில் காங்கிரஸார் என்ன சாதனை செய்தார்கள் என கேட்டார் மோடி

    சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    கடந்த சட்டசபை காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையில் ஆட்சி நடைபெற்றது. இதனால், மீண்டும் தொடர்ந்து ஆட்சிக்கு வர காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பா.ஜ.க.வும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.

    பா.ஜ.க.வை வெற்றியடைய செய்ய இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று அம்மாநில கன்கெர் நகரத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது. மாநில மக்களும், பா.ஜ.க.வும் இணைந்து சத்தீஸ்கர் மாநிலம் உருவாக பாடுபட்டனர். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, இங்குள்ள பா.ஜ.க.வுடன் சண்டையிட்டு கொண்டே இருந்தது. இது ஒரு எம்.எல்.ஏ.வையோ அல்லது முதல்வரையோ தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அல்ல. இது உங்கள் குழந்தைகளின் வருங்காலத்தை குறித்து நீங்கள் முக்கிய முடிவெக்க வேண்டிய தேர்தல். சத்தீஸ்கரின் அடையாளத்தை வலிமைப்படுத்த பா.ஜ.க. உழைக்கிறது. கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்து மதிப்பு கூடியதை தவிர அவர்கள் என்ன சாதனை செய்தார்கள்? ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு என்ன கிடைத்தது? இம்மாநில அரசாங்க அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதில் புது சாதனை படைத்து விட்டனர். மக்களுக்கு தரமில்லாத சாலைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளே கிடைத்தன.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியை நெருங்கி உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இழுபறியான நிலை உள்ளது. #Results2018 #ChhattisgarhElections
    ராய்ப்பூர்:

    தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து பின்தங்கினர்.

    குறிப்பாக 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியமைக்க 46 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், மதிய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.


    மத்திய பிரதேசத்தைப் பொருத்தவரை ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. நேரம் செல்லச் செல்ல காங்கிரசுக்கு இணையாக பாஜகவும் முன்னேறியது. ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில், மதிய நிலவரப்படி காங்கிரஸ் 114 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 102 இடங்களில் முன்னிலை பெற்றது. இந்த நிலவரத்தில் அடுத்தடுத்து மாற்றம் ஏற்படுவதால், இழுபறி நீடிக்கிறது.

    இதேபோல் ராஜஸ்தானிலும் இழுபறியே நீடிக்கிறது. ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரை (100) எந்த கட்சியும் நெருங்கவில்லை. காங்கிரஸ் 94 இடங்களிலும், பாஜக 80 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன. #Results2018 #ChhattisgarhElections
    சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் 5 நக்சலைட்கள் கோப்ரா படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். #Chhattisgarhencounter #fiveNaxalsdead #Bijapurencounter
    ராய்ப்பூர்:

    90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவேயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
     
    இந்த பாதுகாப்பையும் மீறி தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் இன்று காலை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும், இன்று பிற்பகல் பிஜப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாமெட் பகுதியில் நக்சலைட்களுக்கும் ‘கோப்ரா’ எனப்படும் நக்சல் ஒழிப்பு பாதுகாப்பு படையினருக்கும் இடையில்  பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    கமாண்டோ படையை சேர்ந்த இரு வீரர்களும், கோப்ரா படையை சேர்ந்த மூன்று வீரர்களும் இந்த தாக்குதலில் காயமடைந்தனர். #Chhattisgarhencounter  #fiveNaxalsdead #Bijapurencounter 
    சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 42 கோடீசுவரர்கள் வெற்றி பெறுவதற்காக அதிக அளவிலான பணத்தை செலவு செய்கின்றனர். #BJP #Congress

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 12-ந்தேதியும், 20-ந்தேதியும் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    90 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சத்தீஸ்கர் சட்ட சபையில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்-அஜீத்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் 187 பேர் களத்தில் உள்ளனர்.

    இவர்கள் பின்னணி பற்றி ஜனநாயக சீர்திருத்த கழகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது.

     


    வேட்பாளர்களில் பெரும் பாலானவர்கள், வயதானவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 20 சதவீதம்பேர் தான் இளைஞர்கள் என்று புள்ளி விபரம் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    14 பெண் வேட்பாளர்கள் 60 வயதை கடந்தவர்கள் என்று தெரிகிறது. வேட்பாளர்களில் கணிசமானவர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    மொத்த வேட்பாளர்களில் 42 பேர் மிகப்பெரிய கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் 13 பேர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். 13 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். 4 பேர் அஜீத்ஜோகி கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

    66 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இவர்கள் அனைவரும் பணத்தை அள்ளி வீசி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். #BJP #Congress

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொருட்களை அடித்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. #ChhattisgarhElection #ChhattisgarhCongress
    ராய்ப்பூர்:

    சத்திஸ்கர் மாநிலத்தில் வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 19 வேட்பாளர்கள் இடம்பெற்றனர். இதில் சில வேட்பாளர் தேர்வில் கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது. ராய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராய்ப்பூர் தெற்கு தொகுதி தொடர்பாக நடந்த இந்த மோதலில், அலுவலகத்தில் உள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை தேர்தல் பொறுப்பாளர் புனியா சமாதானப்படுத்தினார்.



    இதேபோல் பிலாஸ்பூரிலும் சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். ஆனாலும் கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை என கட்சி நிர்வாகி நரந்திர போலார் கூறியுள்ளார்.

    ‘கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றிய தங்களுக்கு சீட் வழங்கப்பட வேண்டும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள். அதில் தவறு இல்லை. அதேசமயம், இங்கு யாரும் அதிருப்தியாளர்கள் இல்லை. நாங்கள் ஒரே குடும்பம். பாஜகவுக்கு எதிராக ஒற்றுமையாக இருக்கிறோம்’ என்றார் நரேந்திர போலார். #ChhattisgarhElection #ChhattisgarhCongress
    ×