என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செந்துறை அருகே ஆரம்ப சுகாதார நிலையம்- பள்ளியில் கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்17 Nov 2017 1:59 PM GMT (Updated: 17 Nov 2017 1:59 PM GMT)
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகளில் கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார்.
செந்துறை:
செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனந்தவாடி, கீழமாளிகை, இரும்புலிக் குறிச்சியில் உள்ள அரசு பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார். அப்போது ஆனந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவேடு, அறிவியல் ஆய்வகம், கழிப்பறை, மாணவர்களுக்கு வழங்கும் உணவை சோதனை செய்தார்.
மேலும் ஆனந்தவாடி அங்கன் வாடி மையத்தில் குழந்தை களுக்கு வழங்கப்படும் சத்து உருண்டை மாவு, உணவின் தரம்,குழந்தைகளுக்கு அளிக்கப் படும் பயிற்சியை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து இரும்புலிக் குறிச்சி ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகள், கர்ப்பிணிகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சை குறித்து கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார்.
பின்னர் கீழமாளிகை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் 201617ன்கீழ் ரூ.8 லட்சத்தில் ராஜமூர்த்தி என்பவர் கிணறு அமைக்கும் பணி, வீரக்கான் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டிட கட்டுமான பணியை ஆய்வு செய்தார். செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் மற்றும் மருத்துவர், செவிலியர்கள் உடனிருந்தனர்.
செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனந்தவாடி, கீழமாளிகை, இரும்புலிக் குறிச்சியில் உள்ள அரசு பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார். அப்போது ஆனந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவேடு, அறிவியல் ஆய்வகம், கழிப்பறை, மாணவர்களுக்கு வழங்கும் உணவை சோதனை செய்தார்.
மேலும் ஆனந்தவாடி அங்கன் வாடி மையத்தில் குழந்தை களுக்கு வழங்கப்படும் சத்து உருண்டை மாவு, உணவின் தரம்,குழந்தைகளுக்கு அளிக்கப் படும் பயிற்சியை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து இரும்புலிக் குறிச்சி ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகள், கர்ப்பிணிகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சை குறித்து கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார்.
பின்னர் கீழமாளிகை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் 201617ன்கீழ் ரூ.8 லட்சத்தில் ராஜமூர்த்தி என்பவர் கிணறு அமைக்கும் பணி, வீரக்கான் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டிட கட்டுமான பணியை ஆய்வு செய்தார். செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் மற்றும் மருத்துவர், செவிலியர்கள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X