என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா பாதுகாப்பு குறித்து ஏ.டி.ஜி.பி. ஆய்வு
Byமாலை மலர்16 Nov 2017 12:32 PM GMT (Updated: 16 Nov 2017 12:32 PM GMT)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தமிழக காவல் துறை கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து 29-ந் தேதி மகாதேரோட்டமும், டிசம்பர் 2-ந் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும். தீபத் திருவிழாவை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தீபத் திருவிழாவையொட்டி கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. விஜயக்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், டி.ஐ.ஜி.வனிதா, எஸ்.பி. (பொறுப்பு)பகலவன், ஏ.டி.எஸ்.பி. ரங்கராஜன், ஏ.எஸ்.பி. ரவளிப்பிரியா, டி.எஸ்.பி. குணசேகரன், கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, தீபத்திரு விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது, அதிகாலையில் பரணி தீபத்திற்கு எவ்வளவு பக்தர்கள் அனுமதிக்கலாம், பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவிப்பதை தடுக்கும் வகையில் போதிய வசதிகளை ஏற்படுத்துவது, அதேபோல் மாலையில் மகாதீபம் தரிசிக்க அனுமதிக்கப்படும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து 29-ந் தேதி மகாதேரோட்டமும், டிசம்பர் 2-ந் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும். தீபத் திருவிழாவை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தீபத் திருவிழாவையொட்டி கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. விஜயக்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், டி.ஐ.ஜி.வனிதா, எஸ்.பி. (பொறுப்பு)பகலவன், ஏ.டி.எஸ்.பி. ரங்கராஜன், ஏ.எஸ்.பி. ரவளிப்பிரியா, டி.எஸ்.பி. குணசேகரன், கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, தீபத்திரு விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது, அதிகாலையில் பரணி தீபத்திற்கு எவ்வளவு பக்தர்கள் அனுமதிக்கலாம், பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவிப்பதை தடுக்கும் வகையில் போதிய வசதிகளை ஏற்படுத்துவது, அதேபோல் மாலையில் மகாதீபம் தரிசிக்க அனுமதிக்கப்படும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X