search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் போலீஸ்போல நடித்து பணம் பறித்தவர் கைது
    X

    நாகர்கோவிலில் போலீஸ்போல நடித்து பணம் பறித்தவர் கைது

    நாகர்கோவிலில் வாலிபரை குண்டர் சட்டத்தில் இருந்து காப்பாற்ற தனக்கு ரூ. 50 ஆயிரம் தர வேண்டும் என்று போலீஸ் போல நடித்தவர் கைது செய்யப்பட்டார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நேசமணி நகர் புதிய ஸ்டேட் பாங்கி காலனியை சேர்ந்தவர் சேம்பிரைட். இவரது அண்ணன் சேம்டேவிட்டை விபசார வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் மணிக்கட்டிபொட்டல் பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் தன்னை போலீஸ் என்று சேம்பிரைட்டிடம் அறிமுகம் செய்துகொண்டார். சேம் டேவிட்டை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் இருக்க தனக்கு ரூ.50 ஆயிரம் தரும்படி கூறி வாங்கிக்கொண்டார். ஆனால் சேம்டேவிட் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதனால் அஜித்திடம் சேம்பிரைட் இதுபற்றி கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் போல நடித்து பணம் பறித்ததாக அஜித்தை கைது செய்தனர்.
    Next Story
    ×