என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கம்பம் அருகே காரில் கஞ்சா கடத்திய தி.மு.க. பிரமுகர் நண்பர்களுடன் கைது
கம்பம்:
தேனி அருகே கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பம் மெட்டு சோதனை சாவடி பக்கம் கேரள கலால்துறை இன்ஸ்பெக்டர் அணில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் தி.மு.க. கொடியுடன் வேகமாக வந்தது. உடனே கலால்துறையினர் அந்த காரை மறித்தனர். காரில் 6 பேர் இருந்தனர். காரில் இருந்தவர்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் விழித்தனர்.
எனவே போலீசார் அவர்களை தனித்தனியாக சோதனை போட்டனர். அப்போது 6 பேரும் உள்ளாடைக்குள் கஞ்சா மறைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அவர்கள் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. உடனே 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
1. சேக்அப்துல்லா (வயது22). கம்பம் தி.மு.க. இளைஞரணி செயலாளர், 2.நசீர்முகமது. 3. கிருஷ்ணகுமார், 4அப்துல்ரகீம், 5.சேக்முகமது, ரியாஸ்கான். இவர்கள் அனைவரும் கம்பம் சாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். கைதான அனைவரும் நண்பர்கள்.
இவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரும் எங்கு இருந்து கஞ்சா வாங்கி வந்தனர். இதற்கு மூளையாக இருப்பது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்