search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக பிரமுகர் கைது"

    • கடந்த 30-ந்தேதி மூளிக்குளம் பகுதியில் வைத்து ஜெகனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
    • தனிப்படை போலீசார், பிரபுவை தீவிரமாக தேடி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளம் விரல்மீண்ட நாயனார் தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 34). பா.ஜனதா மாநகர இளைஞரணி செயலாளர். திருமணம் ஆகாதவர்.

    கடந்த 30-ந்தேதி மூளிக்குளம் பகுதியில் வைத்து ஜெகனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கர், சந்துரு, மாரிச்செல்வம், பாளையங்கோட்டையை சேர்ந்த அனீஸ், அஜித்குமார், ராஜாகுடியிருப்பு விக்கி என்ற விக்னேஷ்வரன், வி.எம்.சத்திரம் வசந்த், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த இசக்கிமுத்து, திம்மராஜபுரம் மாணிக்கராஜா, தச்சநல்லூர் முத்துபாண்டி ஆகிய 10 பேரை கைது செய்தனர். நேற்று காலையில் வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டையை சேர்ந்த பரமராஜ் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக மூளிக்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பிரபுவை கைது செய்யக்கோரி ஜெகனின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார், பிரபுவை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் பிரபு (46) சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் தி.மு.க. பிரமுகர் பிரபு சிறையில் அடைக்கப்பட்டார். 

    • மதுபோதையில் பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • தி.மு.க. பிரமுகர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    போரூர்:

    ராமாபுரம், திருவள்ளுவர் சாலையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு தீமிதி திருவிழா நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி அங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து இருந்தனர். ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது மதுபோதையில் இருந்த நபர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் போலீசிடம் திடீரென தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் அருகில் இருந்த போலீசாரிடம் இதுபற்றி தெரிவித்தார்.

    இதையடுத்து மதுபோதையில் பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் கண்ணன் (வயது51) என்பது தெரிந்தது. தி.மு.க. பிரமுகரான அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • கைது செய்யப்பட்ட நிலவழகன் ஆரணி பேரூர் தி.மு.க. துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
    • நிலவழகன் கைது செய்யப்பட்ட செய்தி ஆரணி பகுதியில் பரவியது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பருத்தி சூதாட்டம் எனப்படும் காட்டன் சூதாட்டம் மற்றும் 3 சீட்டு எனப்படும் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவை கட்டுக்கடங்காமல் நடப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆரணி தபால் நிலையம் அருகே சென்றபோது பணம் வைத்து பருத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

    கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.1,110 மற்றும் துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் அவரது பெயர் நிலவழகன் என்ற செந்தில்குமார் (வயது39) என்றும் ஆரணி, எஸ்.பி. கோவில் தெருவில் வசித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியவர் ஆரணியைச் சேர்ந்த நித்யராஜ் என்பது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட நிலவழகன் ஆரணி பேரூர் தி.மு.க. துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி பொன்னரசி ஆரணி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினர் ஆவார். நிலவழகன் கைது செய்யப்பட்ட செய்தி ஆரணி பகுதியில் பரவியது.

    இதனால் தி.மு.க.வைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஆரணி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆரணி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து ஊத்துக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் குமார் தலைமையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ஆரணி போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், அனைவரையும் கலைந்து செல்ல செய்தனர். கைது செய்யப்பட்ட நிலவழகனை வெங்கல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து அவரது உத்தரவின்பேரில் அவரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×