search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் கைது
    X

    பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் கைது

    • மதுபோதையில் பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • தி.மு.க. பிரமுகர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    போரூர்:

    ராமாபுரம், திருவள்ளுவர் சாலையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு தீமிதி திருவிழா நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி அங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து இருந்தனர். ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது மதுபோதையில் இருந்த நபர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் போலீசிடம் திடீரென தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் அருகில் இருந்த போலீசாரிடம் இதுபற்றி தெரிவித்தார்.

    இதையடுத்து மதுபோதையில் பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் கண்ணன் (வயது51) என்பது தெரிந்தது. தி.மு.க. பிரமுகரான அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×