search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Member Arrested"

    • கைது செய்யப்பட்ட நிலவழகன் ஆரணி பேரூர் தி.மு.க. துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
    • நிலவழகன் கைது செய்யப்பட்ட செய்தி ஆரணி பகுதியில் பரவியது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பருத்தி சூதாட்டம் எனப்படும் காட்டன் சூதாட்டம் மற்றும் 3 சீட்டு எனப்படும் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவை கட்டுக்கடங்காமல் நடப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆரணி தபால் நிலையம் அருகே சென்றபோது பணம் வைத்து பருத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

    கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.1,110 மற்றும் துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் அவரது பெயர் நிலவழகன் என்ற செந்தில்குமார் (வயது39) என்றும் ஆரணி, எஸ்.பி. கோவில் தெருவில் வசித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியவர் ஆரணியைச் சேர்ந்த நித்யராஜ் என்பது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட நிலவழகன் ஆரணி பேரூர் தி.மு.க. துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி பொன்னரசி ஆரணி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினர் ஆவார். நிலவழகன் கைது செய்யப்பட்ட செய்தி ஆரணி பகுதியில் பரவியது.

    இதனால் தி.மு.க.வைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஆரணி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆரணி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து ஊத்துக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் குமார் தலைமையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ஆரணி போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், அனைவரையும் கலைந்து செல்ல செய்தனர். கைது செய்யப்பட்ட நிலவழகனை வெங்கல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து அவரது உத்தரவின்பேரில் அவரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×