என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியகுளம் அருகே டெங்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டரை முற்றுகையிட்ட மக்கள்
பெரியகுளம்:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதியில் இதன் தாக்கம் அதிகம் உள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் இன்று காலை பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊராட்சியில் டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் காரை மறித்து முற்றுகையிட்டனர்.
கலெக்டரிடம் கிராமத்தினர் ஆவேசமாக கூறுகையில் வடகரை ஊராட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றவில்லை. குப்பைகள் மலை போல் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகி உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். தொடர்ந்து கிராமத்தினர் வாக்குவாதம் செய்தனர்.
உடனே கலெக்டர் அதிகாரிகளை அழைத்து இந்த 24 மணி நேரத்தில் உடனே நடவடிக்கை எடுத்து எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கண்டித்தார். அதன் பின்னர் மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர். அதனை தொடர்ந்து கலெக்டர் வெங்கடாசலம் அந்த பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து சென்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்