என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவையாறு அருகே வாகன சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திருடன்
திருவையாறு:
திருவையாறு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜூ(வயது 56). இவர் சம்பவத்தன்று திருவையாறு கீழவீதியில் உள்ள அடகு கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் மோட்டார் சைக்கிளை கடைக்கு வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்றுவிட்டான்.
இது பற்றி ராஜூ திருவையாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு திருவையாறு காவேரி பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்த ராமு என்பவரது மகன் சூர்யா(20) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு போன ராஜூவின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து சூர்யாவை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் திருவையாறு நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்