search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
    X

    திருச்செந்தூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

    திருச்செந்தூர் அருகே சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் நேற்று கீழ நாலுமூலைக்கிணறு மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரை அடுத்த கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்துக்கு எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கீழ நாலுமூலைக்கிணறில் சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் கீழ நாலுமூலைக்கிணறு மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி, யூனியன் ஆணையாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உடனே குடிநீர் வினியோகம் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×