என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்தூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்17 Aug 2017 5:25 PM GMT (Updated: 17 Aug 2017 5:25 PM GMT)
திருச்செந்தூர் அருகே சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் நேற்று கீழ நாலுமூலைக்கிணறு மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரை அடுத்த கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்துக்கு எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கீழ நாலுமூலைக்கிணறில் சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் கீழ நாலுமூலைக்கிணறு மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி, யூனியன் ஆணையாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உடனே குடிநீர் வினியோகம் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்செந்தூரை அடுத்த கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்துக்கு எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கீழ நாலுமூலைக்கிணறில் சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் கீழ நாலுமூலைக்கிணறு மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி, யூனியன் ஆணையாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உடனே குடிநீர் வினியோகம் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X