என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருத்தகிரீஸ்வரர் கோவில் சிலைகள் திருட்டு: விருத்தாசலம் கோர்ட்டில் சுபாஷ் கபூர் ஆஜர்
Byமாலை மலர்12 Aug 2017 5:02 AM GMT (Updated: 12 Aug 2017 5:02 AM GMT)
விருத்தகிரீஸ்வரர் கோவில் சிலைகள் திருட்டு தொடர்பான வழக்கில் விருத்தாசலம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுபாஷ் கபூர் ஆஜரானார்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள அர்த்தநாரீஸ்வரர், பிரத்யங்கரா தேவி, கணபதி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி ஆகிய கற்சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது தொடர்பாக சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர், லட்சுமி நரசிம்மன், ஊமைத்துரை, அண்ணாதுரை, வல்லபபிரகாஷ், ஆதித்யபிரகாஷ் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் திருச்சியிலும், சிலர் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விருத்தாசலம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சி மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து விருத்தாசலம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயகுமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். அங்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்ததும் சுபாஷ் கபூர் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள அர்த்தநாரீஸ்வரர், பிரத்யங்கரா தேவி, கணபதி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி ஆகிய கற்சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது தொடர்பாக சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர், லட்சுமி நரசிம்மன், ஊமைத்துரை, அண்ணாதுரை, வல்லபபிரகாஷ், ஆதித்யபிரகாஷ் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் திருச்சியிலும், சிலர் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விருத்தாசலம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சி மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து விருத்தாசலம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயகுமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். அங்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்ததும் சுபாஷ் கபூர் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X