search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைகள் திருட்டு"

    • முரளி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நாட்டியப்பள்ளி 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
    • நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை திருட்டு போனது.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் பரதநாட்டிய பயிற்சியாளர் முரளி (வயது 50) என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நாட்டியப்பள்ளி 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு முரளி பரதநாட்டிய பயிற்சியை முடித்துவிட்டு நாட்டியப் பள்ளியை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்க்கும்போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உடனே உள்ளே சென்று பார்க்கும் போது சிலைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். குனியமுத்தூர் போலீசார் பதிவு செய்து விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த பகுதி மக்கள் கூறுகையில் சம்பந்தப்பட்ட அந்த இடம் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காட்சியளிக்கும். நள்ளிரவு சமயங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இங்கு அதிகமாவே உள்ளது . எனவே மின்விளக்கு வசதி வேண்டும். மேலும் போலீசார் இந்தப் பகுதியில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தனர். 

    • மகிமைதாஸ் என்பவரிடம் 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் பதுக்கி வைத்து ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி செய்வதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஐ.ஜி தினகரன் மேற்பார்வையில், கூடுதல் சூப்பிரண்டு மலைச்சாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரேமா சாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக்கேயன், முருகபூபதி, பாண்டியராஜன், செல்வராஜ், சந்தனகுமார், ஏட்டு பரமசிவன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கடத்தல்காரர்களில் ஒருவனிடம் 'எங்களுக்கு பழமையான சாமி சிலைகள் வேண்டும், கோடிக்கணக்கில் பணம் தரத் தயார்' என்று தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த நபர் பெயர், முகவரி மற்றும் விலாசத்தை கொடுத்து உள்ளார். தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் இருப்புகுறிச்சியை சேர்ந்த மகிமைதாஸ் என்பது தெரியவந்தது. அவரிடம் 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    அவரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் விருத்தாச்சலம், பெரியகோட்டிமுளையை சேர்ந்த பச்சமுத்து என்பவர் ஐம்பொன் சிலைகளை கொடுத்து விற்பனை செய்ய சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஈரோடு, கொடுமுடியில் பதுங்கி இருந்த பச்சமுத்துவை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்து நடராஜர் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர் போலீசாரிடம் மேற்கண்ட சிலைகளை அரியலூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கொடுத்து விற்க சொன்னதாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து மதுரை சரக சிலை திருட்டு தடுப்பு தனிப்படை போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மதுரை கோவிலில் இருந்து கடத்தப்பட்டதா? எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீட்கப்பட்ட சாமி சிலைகள்.

    ×