search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sundarapuram-Madhukarai road i"

    • வீட்டில் இருந்து பரபரப்பு கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது
    • ராஜ்குமார் வீட்டிற்குள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    குனியமுத்தூர்,

    சிவகங்கை மாவட்டம் கோட்டையிருப்பை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது45).

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவைக்கு வந்துள்ளார்.

    இங்கு அவருக்கு கார் டிரைவர் வேலை கிடைத்ததை தொடர்ந்து சுந்தராபுரம் அடுத்த கணேசபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். தினமும் வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக ராஜ்குமாரின் வீடு பூட்டியே கிடந்தது. அவர் ஊருக்கு சென்றிருப்பார் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர்.

    ஆனால் சம்பவத்தன்று காலை வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியான அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து, வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் விரைந்து வந்து பார்த்தார். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

    இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ராஜ்குமார் வீட்டிற்குள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணத்தை அறிய வீடு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது கடிதம் ஒன்று இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்று மட்டும் எழுதி இருந்தது. போலீசார் அதனை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முரளி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நாட்டியப்பள்ளி 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
    • நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை திருட்டு போனது.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் பரதநாட்டிய பயிற்சியாளர் முரளி (வயது 50) என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நாட்டியப்பள்ளி 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு முரளி பரதநாட்டிய பயிற்சியை முடித்துவிட்டு நாட்டியப் பள்ளியை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்க்கும்போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உடனே உள்ளே சென்று பார்க்கும் போது சிலைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். குனியமுத்தூர் போலீசார் பதிவு செய்து விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த பகுதி மக்கள் கூறுகையில் சம்பந்தப்பட்ட அந்த இடம் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காட்சியளிக்கும். நள்ளிரவு சமயங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இங்கு அதிகமாவே உள்ளது . எனவே மின்விளக்கு வசதி வேண்டும். மேலும் போலீசார் இந்தப் பகுதியில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தனர். 

    • சுந்தராபுரம்-மதுக்கரை சாலை முழுவதும் கடந்த 4 நாட்களாகவே சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
    • வாகனங்கள் அனைத்தும் சேற்றில் மிதந்து, மெல்ல மெல்ல நகர்ந்து செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது.

    குனியமுத்தூர்:

    கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

    இந்த நிலையில் சுந்தராபுரம்-மதுக்கரை சாலை முழுவதும் கடந்த 4 நாட்களாகவே சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    கடந்த சில வரு–டங்களாகவே சுந்தரா புரம் -மதுக்கரை சாலையை பல்வேறு காரணங்களு க்காக தோண்டப்பட்டு அந்த பகுதியே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    கடந்த 4 நாட்களாக நள்ளிரவில் கன மழை பெய்து வருகிறது. இதனால் இந்த சாலையில் குளம் போல் சேறும், சகதியும் தேங்கி காட்சியளிக்கிறது.

    சுந்தராபுரம்-மதுக்கரை சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலையை கண்ணில் காண முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. எங்கு திரும்பினாலும் சேறும் சகதியும் காணப்படுகிறது.

    வாகனங்கள் அனைத்தும் சேற்றில் மிதந்து, மெல்ல மெல்ல நகர்ந்து செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது. ஆனால் இதனை சரி செய்ய இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகளும் கூட சாலையைக் கடக்க முடியாத நிலையில் உள்ளனர்.

    சாலை முழுவதும் நீரில் மிதப்பதால் எங்கு பள்ளம் இருக்கிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் ஆட்டோ மற்றும் லாரி டயர் சேற்றில் சிக்கி சாய்ந்திருக்கும் நிலையையும் காணமுடிகிறது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க விட்டால் பொது மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்வோம். இவ்வாறு வாகன ஓட்டிகள் தங்களது மனக் குமுறல்களை வெளியிட்டனர்.

    ×