search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swamy statue"

    • 12 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலை மீண்டும் எடுக்கப்பட்டு முறைப்படி கோவிலில் வைத்து வணங்கி வந்தனர்.
    • இதற்கு கோவில் வரிதாரர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குட்டம் கிராமத்தில் பழமையான ஆனந்தவள்ளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் அமர்ந்த நிலையில் இருந்த ஆனந்த வள்ளி அம்மன் சிலை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு சுவாமி நின்ற நிலையில் புதிதாக சிலை வடிவமைக்கப்பட்டு வழிபட்டு வந்தனர். அமர்ந்த நிலையில் இருந்த ஆனந்தவள்ளி அம்மன் சிலை அருகில் உள்ள கிணற்றில் போடப்பட்டது. சென்ற ஆண்டு நின்ற நிலையில் இருந்த அம்மன் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலை மீண்டும் எடுக்கப்பட்டு முறைப்படி கோவிலில் வைத்து வணங்கி வந்தனர். இதற்கு கோவில் வரிதாரர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் 2 வாகனங்களில் நின்ற நிலையில் புதிய அம்மன் சிலை மற்றும் பீடத்தை ஏற்றிகொண்டு குட்டம் ஆனந்தவள்ளி அம்மன் கோவிலுக்கு சிலர் வந்தனர். அமர்ந்த நிலையில் உள்ள அம்மன் சிலைக்கு பதிலாக நின்ற நிலையில் புதிய அம்மன் சிலை வைக்க முயற்சி நடப்பதாக உவரி போலீசுக்கு ஒருதரப்பினர் புகார் கொடுத்தனர். உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று புதிய அம்மன் சிலையையும், பீடத்தையும் வாகனங்களுடன் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் நேற்று நள்ளிரவில் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மகிமைதாஸ் என்பவரிடம் 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் பதுக்கி வைத்து ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி செய்வதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஐ.ஜி தினகரன் மேற்பார்வையில், கூடுதல் சூப்பிரண்டு மலைச்சாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரேமா சாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக்கேயன், முருகபூபதி, பாண்டியராஜன், செல்வராஜ், சந்தனகுமார், ஏட்டு பரமசிவன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கடத்தல்காரர்களில் ஒருவனிடம் 'எங்களுக்கு பழமையான சாமி சிலைகள் வேண்டும், கோடிக்கணக்கில் பணம் தரத் தயார்' என்று தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த நபர் பெயர், முகவரி மற்றும் விலாசத்தை கொடுத்து உள்ளார். தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் இருப்புகுறிச்சியை சேர்ந்த மகிமைதாஸ் என்பது தெரியவந்தது. அவரிடம் 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    அவரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் விருத்தாச்சலம், பெரியகோட்டிமுளையை சேர்ந்த பச்சமுத்து என்பவர் ஐம்பொன் சிலைகளை கொடுத்து விற்பனை செய்ய சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஈரோடு, கொடுமுடியில் பதுங்கி இருந்த பச்சமுத்துவை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்து நடராஜர் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர் போலீசாரிடம் மேற்கண்ட சிலைகளை அரியலூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கொடுத்து விற்க சொன்னதாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து மதுரை சரக சிலை திருட்டு தடுப்பு தனிப்படை போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மதுரை கோவிலில் இருந்து கடத்தப்பட்டதா? எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீட்கப்பட்ட சாமி சிலைகள்.

    காஞ்சீபுரம் கோவிலில் சாமி சிலைகள் குறித்து சமீப காலமாக பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அம்மன் கோயிலில் சாமி சிலை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சிபுரம்:

    பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் அருகே கங்கையம்மன் கோவில் உள்ளது.

    இங்கு பணிபுரியும் அர்ச்சகர் பணிக்கு வராததால் நேற்று இரவு கோவிலை பூட்ட அப்பகுதி மக்கள் சென்றனர்.

    அப்போது உட்பிரகாரக் கதவு அருகே ஒன்றரை அடி உயரமும் 10 கிலோ எடையும் கொண்ட அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் கொண்ட உலோகச் சிலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவர் போலீசாரிடம் கூறும் போது “எனது மகன் மகேந்திரன், திருப்போரூர் பகுதியில் இருந்து இந்த சாமி சிலையை வாங்கி வந்து கடந்த 6 மாதமாக வீட்டில் வைத்து பூஜை செய்தான்.

    வீட்டிற்கு வந்த உறவினர்கள் சிலர் இந்த சிலையை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று கூறியதால் அதனை அம்மன் கோயிலில் வைத்தான்” என்று கூறினார்.

    இதையடுத்து பன்னீர் செல்வம் அவரது மகன் மகேந்திரன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாமி சிலை எங்கு வாங்கப்பட்டது? விற்றவர்கள் யார்? எதற்காக வாங்கப்பட்டது என்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காஞ்சீபுரம் கோவிலில் சாமி சிலைகள் குறித்து சமீப காலமாக பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அம்மன் கோயிலில் சாமி சிலை வைக்கப்பட்ட சம்பவம் காஞ்சீபுரம் நகரில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×