என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி: பெண் தலைமறைவு
Byமாலை மலர்1 Aug 2017 10:14 AM GMT (Updated: 1 Aug 2017 10:14 AM GMT)
முதலியார் பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை பட்டம்மாள் நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 27). இவர், சென்னையில் தனியார் கார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் முதலியார் பேட்டை பாரதி மில் திட்டு பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவரது மனைவி செவ்வந்தியிடம் (37). மாத ஏலச்சீட்டு கட்டி வந்தார்.
ஆனால், ஏலச்சீட்டு காலம் முடிந்தும் அதற்கான பணம் ரூ.3 லட்சத்தை ராஜாவுக்கு செவ்வந்தி கொடுக்கவில்லை.
இதுகுறித்து பல முறை ராஜா சென்று கேட்ட போது பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார்.
இந்த நிலையில் செவ்வந்தி திடீரென மாயமானார். இதையடுத்து விசாரித்த போது, ஏலச்சீட்டு பணத்தை மோசடி செய்து செவ்வந்தி தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ராஜா முதலியார் பேட்டை போலீசில் ஏலச்சீட்டு பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து செவ்வந்தி மீது அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. சுமார் ரூ.40 லட்சம் வரை செவ்வந்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே செவ்வந்தியின் கணவர் வடிவேலு போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளார். அவரிடம் தலைமறைவாக உள்ள செவ்வந்தி குறித்து விசாரித்து வருகிறார்கள்.
புதுவை முதலியார்பேட்டை பட்டம்மாள் நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 27). இவர், சென்னையில் தனியார் கார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் முதலியார் பேட்டை பாரதி மில் திட்டு பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவரது மனைவி செவ்வந்தியிடம் (37). மாத ஏலச்சீட்டு கட்டி வந்தார்.
ஆனால், ஏலச்சீட்டு காலம் முடிந்தும் அதற்கான பணம் ரூ.3 லட்சத்தை ராஜாவுக்கு செவ்வந்தி கொடுக்கவில்லை.
இதுகுறித்து பல முறை ராஜா சென்று கேட்ட போது பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார்.
இந்த நிலையில் செவ்வந்தி திடீரென மாயமானார். இதையடுத்து விசாரித்த போது, ஏலச்சீட்டு பணத்தை மோசடி செய்து செவ்வந்தி தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ராஜா முதலியார் பேட்டை போலீசில் ஏலச்சீட்டு பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து செவ்வந்தி மீது அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. சுமார் ரூ.40 லட்சம் வரை செவ்வந்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே செவ்வந்தியின் கணவர் வடிவேலு போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளார். அவரிடம் தலைமறைவாக உள்ள செவ்வந்தி குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X