என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பறக்கும்போது புகை - துபாய் விமானம் சென்னையில் அவசர தரையிறக்கம்
Byமாலை மலர்26 July 2017 7:58 AM GMT (Updated: 26 July 2017 7:58 AM GMT)
துபாயில் இருந்து வந்த விமானத்தின் என்ஜின் பகுதியில் திடீரென்று கரும்புகை கிளம்பியதால் சென்னை மீனம்பாக்கத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னை:
துபாயில் இருந்து 177 பயணிகள் உட்பட 184 பேருடன் வந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்னையை நெருங்கும்போது ஒரு என்ஜினில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பியதை விமானிகள் கவனித்தனர். உடனடியாக, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டனர்.
நிலைமையை விவரித்து, அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டனர். இதையடுத்து, அனுமதி வழங்கப்பட்டது. அந்த விமானம் தரையிறங்கிய ஓடுபாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஓடுபாதையில் ஊர்ந்துவந்த விமானம் வேகம் குறைந்து நின்றவுடன் உள்ளே இருந்த 177 பயணிகளும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். அந்த விமானத்தை தீவிரமாக சோதித்து, புகை வந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்து சீர்படுத்திய பின்னர், மீண்டும் துபாய்க்கு புறப்பட்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
துபாயில் இருந்து 177 பயணிகள் உட்பட 184 பேருடன் வந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்னையை நெருங்கும்போது ஒரு என்ஜினில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பியதை விமானிகள் கவனித்தனர். உடனடியாக, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டனர்.
நிலைமையை விவரித்து, அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டனர். இதையடுத்து, அனுமதி வழங்கப்பட்டது. அந்த விமானம் தரையிறங்கிய ஓடுபாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஓடுபாதையில் ஊர்ந்துவந்த விமானம் வேகம் குறைந்து நின்றவுடன் உள்ளே இருந்த 177 பயணிகளும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். அந்த விமானத்தை தீவிரமாக சோதித்து, புகை வந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்து சீர்படுத்திய பின்னர், மீண்டும் துபாய்க்கு புறப்பட்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X