என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உடுமலையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
உடுமலை:
உடுமலை பழனிரோடு நாராயணன் காலனியை சேர்ந்தவர் சையது. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரபியா. இவர்களது மகள் சனிபிபி (வயது 16). அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று சனிபிபி மட்டும் வீட்டில் இருந்தார். வெளியே சென்ற பெற்றோர் மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உள் பக்கமாக தாழ்போடப்பட்டிருந்தது. கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவை திறக்கவில்லை.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கூரையை பிரித்து பார்த்தபோது சனிபிபி தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் கிடைத்தும் உடுமலை இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்