என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலாடுதுறை அருகே கார் திருடர்கள் 2 பேர் கைது
Byமாலை மலர்14 May 2017 1:36 PM GMT (Updated: 14 May 2017 1:36 PM GMT)
மயிலாடுதுறை அருகே இரவு வீட்டு முன்பு நிறுத்திருந்த காரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள பெரம்பூர் ஆண்டாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 61), விவசாயி. இவர், கடந்த 11-ந் தேதி இரவு வழக்கம்போல் தனது வீட்டு வாசல் முன்பு அவரது காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
அவர் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டு வாசல் முன்பு நிறுத்தி இருந்த கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராஜசேகரன் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கு தொடர்பாக போலீசார், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் இருவரும், ராஜசேகரனுக்கு சொந்தமான காரை திருடி சென்றது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடிய ஆண்டாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (25), கோவிந்தசாமி மகன் சந்திரபோஸ் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள பெரம்பூர் ஆண்டாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 61), விவசாயி. இவர், கடந்த 11-ந் தேதி இரவு வழக்கம்போல் தனது வீட்டு வாசல் முன்பு அவரது காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
அவர் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டு வாசல் முன்பு நிறுத்தி இருந்த கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராஜசேகரன் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கு தொடர்பாக போலீசார், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் இருவரும், ராஜசேகரனுக்கு சொந்தமான காரை திருடி சென்றது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடிய ஆண்டாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (25), கோவிந்தசாமி மகன் சந்திரபோஸ் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X