என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு உற்சவம்: தங்கக்குதிரையில் முருகப்பெருமான் உலா
Byமாலை மலர்20 May 2019 3:59 AM GMT (Updated: 20 May 2019 3:59 AM GMT)
திருப்பரங்குன்றம் கோவிலில் மொட்டையரசு உற்சவத்தையொட்டி தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக மொட்டையரசு உற்சவம் நேற்று காலையில் நடைபெற்றது. கோவிலில் இருந்து சன்னதி தெருவில் உள்ள கல்யாண விநாயகர் கோவில் வரை மேள, தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப் பெருமான் சட்டத்தேரில் எழுந்தருளி பவனி வந்தார்.
இதனையடுத்து தங்கக்குதிரையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து மொட்டையரசு திடல் வரை சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண்கள் அமைத்து சாமி தரிசனம் செய்தனர். மொட்டையரசு திடல் சார்ந்த ஒரே இடத்தில் 75-க்கும் மேற்பட்ட பாரம்பரிய திருக்கண்களில் சாமி எழுந்தருளினார்.
ஒவ்வொரு திருக்கண்களிலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்கள் எழுப்பி பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். காலையிலிருந்து மாலை வரை மொட்டையரசு திடலில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான் இரவு 9 மணி அளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளி இருப்பிடம் நோக்கி சென்றார்.வழிநெடுகிலும் பக்தர்கள் குவிந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து தங்கக்குதிரையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து மொட்டையரசு திடல் வரை சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண்கள் அமைத்து சாமி தரிசனம் செய்தனர். மொட்டையரசு திடல் சார்ந்த ஒரே இடத்தில் 75-க்கும் மேற்பட்ட பாரம்பரிய திருக்கண்களில் சாமி எழுந்தருளினார்.
ஒவ்வொரு திருக்கண்களிலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்கள் எழுப்பி பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். காலையிலிருந்து மாலை வரை மொட்டையரசு திடலில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான் இரவு 9 மணி அளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளி இருப்பிடம் நோக்கி சென்றார்.வழிநெடுகிலும் பக்தர்கள் குவிந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X