search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவபெருமானுக்கு அமாவாசை அன்று அன்னாபிஷேகம்
    X

    சிவபெருமானுக்கு அமாவாசை அன்று அன்னாபிஷேகம்

    திருவாரூரில் உள்ள பதஞ்சலி மனோகர் ஆலயத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். மேலும் மகாளய அமாவாசை அன்று, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதோடு, பித்ரு தர்ப்பணமும் செய்கின்றனர்.
    திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் தொலைவில் விளமல் என்ற ஊர் இருக்கிறது. இங்கு பதஞ்சலி மனோகர் ஆலயம் உள்ளது. இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். மேலும் மகாளய அமாவாசை அன்று, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதோடு, பித்ரு தர்ப்பணமும் செய்கின்றனர். பொதுவாக சிவன் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமி தினத்தில்தான் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள், அமாவாசை தினத்தில், திருவாரூர் கமலாலய தீர்த்தத்தில் (தெப்பக்குளம்) உள்ள பிதுர் கட்டத்திலும், விளமல் கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சி யடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை.
    Next Story
    ×