search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரி பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
    X

    நவராத்திரி பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

    ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, பாதுகாப்பு அதிகாரி (பொறுப்பு) சிவக்குமார்ரெட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பறக்கும் படை அதிகாரிகள் ரவீந்திராரெட்டி, சதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 7 மணியளவில் தங்கத்தேரோட்டம், இரவு தங்கக் குதிரை வாகன வீதிஉலா ஆகியவை நடக்கின்றன. 
    Next Story
    ×