என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவையாறு ஐயாறப்பர் கோவில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி
Byமாலை மலர்13 May 2017 8:04 AM GMT (Updated: 13 May 2017 8:04 AM GMT)
திருவையாறு ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான விழாவையொட்டி பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சியும், 8-ந் தேதி தேரோட்டமும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் சப்தஸ்தான விழா நடைபெற்றது. இதையொட்டி ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர்் பல்லக்கிலும் கோவிலில் இருந்து புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று இரவு 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் உள்ள காவிரி ஆற்றில் சங்கமித்தது. தொடர்ந்து காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெற்றது.
இதையடுத்து நேற்று தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து திருவையாறு தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அந்தந்த ஊர்களுக்கு பல்லக்குகள் புறப்பட்டு சென்றன. இரவு காவிரி ஆற்றில் வாணவேடிக்கையும், கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனா. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்் சிவராஜ். சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
நேற்று முன்தினம் சப்தஸ்தான விழா நடைபெற்றது. இதையொட்டி ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர்் பல்லக்கிலும் கோவிலில் இருந்து புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று இரவு 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் உள்ள காவிரி ஆற்றில் சங்கமித்தது. தொடர்ந்து காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெற்றது.
இதையடுத்து நேற்று தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து திருவையாறு தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அந்தந்த ஊர்களுக்கு பல்லக்குகள் புறப்பட்டு சென்றன. இரவு காவிரி ஆற்றில் வாணவேடிக்கையும், கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனா. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்் சிவராஜ். சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X