search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயாறப்பர் கோவில்"

    • ஐயாறப்பர் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 3-ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வருகிற 7-ந் தேதி வரை 13 நாட்கள் விழா நடக்கிறது.

    முன்னதாக நடந்த கொடியேற்றம் விழாவில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் 29-ந் தேதி (சனிக்கிழமை) மாலை தன்னைத்தான பூஜித்தல் நடைபெறுகிறது.

    அன்று 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.

    வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

    விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

    தேர்4 வீதிகள் வழியாக வந்து நிலையடி அடைந்த உடன் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரதாசம் வழங்கப்படுகிறது.

    மே 6-ந் தேதி(சனிக்கிழமை) முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டி யூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.

    இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.

    7-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் மாலை பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ×