search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனுமனின் தரிசனமும் அருளும் பெற்றிட ஸ்லோகம்
    X

    அனுமனின் தரிசனமும் அருளும் பெற்றிட ஸ்லோகம்

    ஆஞ்சநேயர் பக்தர்கள் கேட்கும் அனைத்து வரங்களையும் அருள்பவர். அவருடைய அருளை பெற தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வரவேண்டும்.
    ஆஞ்சநேயர் பக்தர்கள் கேட்கும் அனைத்து வரங்களையும் உடனுக்குடன் அருள்பவர். அவருடைய அருளைப் பெறுவதற்கு மிகச் சிறந்ததும் எளிமையானதுமான ஒரே வழி ராம நாமத்தை ஜபிப்பதுதான். அதைப் பற்றிய ஒரு ஸ்லோகமே உள்ளது. அந்த ஸ்லோகம்:

    யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
    தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
    பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
    மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

    ‘எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள் ‘ இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள். பக்திபூர்வமாக ராமநாமம் ஜபிக்கும் அனைவரும் ஆஞ்சநேயரின் அருளைப் பெற்று சிறக்க வாழலாம்.
    Next Story
    ×